search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரப்பாலத்தில் பா.ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டத்தில் மாநில தலைவர் சாமிநாதன் பேசியபோது எடுத்த படம்.
    X
    மரப்பாலத்தில் பா.ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டத்தில் மாநில தலைவர் சாமிநாதன் பேசியபோது எடுத்த படம்.

    138 கோடி மக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தி சாதனை- பா.ஜ.க. பாராட்டு

    இந்தியாவில் 138 கோடி மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தி பிரதமர் சாதனை படைத்துள்ளதாக பா.ஜ.க. பாராட்டு தெரிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி, மகளிர் அணி, இதர பிற்படுத்தப்பட்டோர் அணி, சிறுபான்மையினர் அணி, விவசாய அணி, தாழ்த்தப்பட்டோர் அணி ஆகிய அணிகளின் ஒருங்கிணைந்த செயற்குழு கூட்டம் மரப்பாலத்தில் உள்ள சுகன்யா கன்வென்சன் சென்டரில் நேற்று நடந்தது.

    இந்த கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, புதுவை மாநில தலைவர் சாமிநாதன், பொதுச்செயலாளர் மோகன்குமார், அசோக்பாபு எம்.எல்.ஏ., இளைஞர் அணி தலைவர் கோவிந்தன் கோபதி, மகளிர் அணி தலைவி ஜெயலட்சுமி, இதர பிற்படுத்தப்பட்டோர்அணி தலைவர் சிவகுமார், சிறுபான்மையினர் அணி தலைவர் விக்டர் விஜயராஜ், விவசாய அணி தலைவர் புகழேந்தி, தாழ்த்தப்பட்டோர் அணி பொதுச்செயலாளர் கங்கைஅமரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    * உலக அளவில் 138 கோடி மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி அளித்து சாதனை படைத்துள்ள பிரதமருக்கு நன்றி தெரிவிப்பது.

    * இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடும், புதுவையில் மழைக்கால நிவாரணமாக அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க பரிந்துரைத்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு நன்றி தெரிவிப்பது.

    * பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ஒன்றரை மடங்கு உயர்த்தி சிறுவிவசாயிகளுக்கு கிசான் கார்டு மற்றும் டி.ஏ.பி., யூரியா மானியத்தை அதிகப்படுத்திய பிரதமருக்கு நன்றி தெரிவிப்பது.

    * பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு இலவச பஸ் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கூட்டணி ஆட்சியில் இலவச பஸ் திட்டத்தை அறிவித்த புதுவை அரசுக்கு நன்றி தெரிவிப்பது.

    மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×