search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டபோது எடுத்த படம்.
    X
    கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டபோது எடுத்த படம்.

    தடை செய்யப்பட்ட 650 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்- கடைக்காரர்களுக்கு அபராதம்

    பெரம்பலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட 650 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு ரூ.17 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் நகர் பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக நகராட்சிக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து நகராட்சி ஆணையர் குமரிமன்னன் தலைமையில் அதிகாரிகள் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் 6 கடைகளில் இருந்து 600 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த கடை உரிமையாளர்களிடம் இருந்து ரூ.14 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டு, அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

    இதேபோல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி ஆலோசனையின்பேரில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளதா? என்று சுகாதார ஆய்வாளர் சாம்கர்ணல் தலைமையில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் ரமேஷ், மணிகண்டன் மற்றும் பரப்புரையாளர்கள் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது 10-க்கும் மேற்பட்ட கடைகளில் பயன்பாட்டில் இருந்த சுமார் 50 கிலோ பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த கடைக்காரர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு, மொத்தம் ரூ.3,600 வசூலிக்கப்பட்டது. மேலும் கடைக்காரர்களிடம் பாலித்தீன் பைகள் மற்றும் கப்புகளை பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.
    Next Story
    ×