என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    செய்யாறில் கஞ்சா வைத்திருந்த 5 வாலிபர்கள் கைது

    செய்யாறில் கஞ்சா வைத்திருந்த 5 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செய்யாறு:

    செய்யாறு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் நேற்று ரோந்து பணியின்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த வாலிபர்களை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தனர்.

    அப்போது கஞ்சா பாக்கெட்டுகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து காஞ்சாவை பறிமுதல் செய்து வட தண்டலம் கிராமத்தை சேர்ந்த வேலியப்பன் (வயது20), கீழ்புதுபாக்கத்தை சேர்ந்த விகல் (23), கொட நகரை சேர்ந்த கோபி (22), கண்ணியம் நகரை சார்ந்த மணி (28), வெங்கட்ராமன் பேட்டை சேர்ந்த புள்ளிமான் ராஜா (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து அவர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×