search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    திருப்பத்தூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

    திருப்பத்தூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. மாவட்டத்தில் உள்ள 4 அரசு மருத்துவமனைகள், 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 294 நடமாடும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மருத்துவ குழுக்கள் மூலம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த முகாமில் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×