என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளி வேன் விபத்துக்குள்ளாகி தலைக்குப்புற கவிழ்ந்து நின்ற காட்சி.
சேத்துப்பட்டு அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 9 மாணவர்கள் படுகாயம்
சேத்துப்பட்டு அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 9 மாணவர்கள் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக தேசூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தேசூர் அருகே உள்ள வயலூரில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பள்ளியின் சுற்றுப்புற கிராமங்களான கீழ்நமண்டி, பெரிய கொரகோட்டை, தென்தின்னலூர், கொரக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து பள்ளியில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
அப்பகுதி மாணவர்கள் வேன் மூலம் பள்ளிக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.
இன்று காலையில் 15-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு வேன் சென்று கொண்டிருந்தது.
அப்போது தேசூர் அடுத்த பெலகாம்பூண்டி அருகே வந்தபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக வேன் டிரைவர் பின் பக்கமாக திரும்பினார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்பாராத விதமாக வயல்வெளி பள்ளத்தில் புகுந்து தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதனால் வேனில் இருந்த மாணவ, மாணவிகள் அலறி கூச்சலிட்டனர். அந்த வழியாக சென்றவர்கள் பள்ளி வேன் கவிழ்ந்து கிடப்பதை பார்த்தை சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர்.
வேனில் இருந்து காயமடைந்த மாணவ, மாணவிகளை மீட்டனர். இதில் 7 மாணவர்கள், 2 மாணவிகள், டிரைவர் உள்பட 10 பேர் காயடைந்தனர். அவர்கள் தெள்ளார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தேசூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தேசூர் அருகே உள்ள வயலூரில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பள்ளியின் சுற்றுப்புற கிராமங்களான கீழ்நமண்டி, பெரிய கொரகோட்டை, தென்தின்னலூர், கொரக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து பள்ளியில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
அப்பகுதி மாணவர்கள் வேன் மூலம் பள்ளிக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.
இன்று காலையில் 15-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு வேன் சென்று கொண்டிருந்தது.
அப்போது தேசூர் அடுத்த பெலகாம்பூண்டி அருகே வந்தபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக வேன் டிரைவர் பின் பக்கமாக திரும்பினார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்பாராத விதமாக வயல்வெளி பள்ளத்தில் புகுந்து தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதனால் வேனில் இருந்த மாணவ, மாணவிகள் அலறி கூச்சலிட்டனர். அந்த வழியாக சென்றவர்கள் பள்ளி வேன் கவிழ்ந்து கிடப்பதை பார்த்தை சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர்.
வேனில் இருந்து காயமடைந்த மாணவ, மாணவிகளை மீட்டனர். இதில் 7 மாணவர்கள், 2 மாணவிகள், டிரைவர் உள்பட 10 பேர் காயடைந்தனர். அவர்கள் தெள்ளார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தேசூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






