என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருச்செந்தூர் அருகே சிறுமியை காரில் கடத்தி பாலியல் தொல்லை: பால் வியாபாரி-நண்பர் மீது வழக்கு
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி தெற்கு தெருவை சேர்நதவர் ராமசாமி. இவரது மகன் செந்தில். இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது நண்பர் ராமநாதபுரம் தெருவை சேர்ந்த பொன் சூர்யா.
சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் அந்த வழியாக காரில் சென்றனர். அப்போது நடந்து சென்று கொண்டிருந்த 11 வயது சிறுமியை நைசாக பேசி காரில் அழைத்துள்ளனர். அதற்கு அந்த சிறுமி மறுத்துள்ளார்.
ஆனால் 2 பேரும், சிறுமியை காரில் கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே இடத்தில் சிறுமியை இறக்கி விட்டுள்ளனர்.
அந்த சிறுமி அழுது கொண்டே தனது தாயாரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். உடனே சிறுமியின் தாயார் திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக போலீசார், செந்தில் மற்றும் அவரது நண்பர் பொன் சூர்யா ஆகிய 2 பேர் மீதும் ஆள் கடத்தல், போக்சோ சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்த 2 பேரும் தலைமறைவாகினர். போலீசார் 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்