என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
பாபநாசம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் நகை- பணம் திருட்டு
பாபநாசம்:
பாபநாசம் அருகே திருக்கருகாவூர் ஸ்ரீவாரி நகர் பிரியங்கா தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது 34). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று மணிகண்டன் வீட்டை பூட்டி விட்டு தனது சகோதரி வீடான கும்பகோணத்திற்கு சென்றுவிட்டு ஊருக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த தங்கச் செயின் 3 பவுன் தங்கத்தோடு 1½ பவுன், வெள்ளி டம்ளர், வெள்ளி குத்து விளக்கு, பால் கிண்ணம் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் உள்பட 1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடி தப்பி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மணிகண்டன் பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதள்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொ) சுபாஷ் சந்திரபோஸ், இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து நகை பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் தஞ்சையில் இருந்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர் கீதா வருகை தந்து கொள்ளையர்களின் கைரேகைகளை சோதனை செய்தார். தஞ்சையில் இருந்து டப்பி என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டு வீட்டிலிருந்து அருகில் தோப்பு வரை ஓடி சென்று படுத்துக்கொண்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்