search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    காரைக்குடியில் மின்சாரம் தாக்கி மெக்கானிக் பலி

    காரைக்குடியில் மின்சாரம் தாக்கி மெக்கானிக் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள பாப்பாவூரணியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் அழகர் (வயது 19). இவர் கழனிவாசல் பகுதியில் உள்ள மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை அழகர் வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டார். அப்போது காரைக்குடி முதல் பிட் பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்றார். அங்கு அழகர் டீ குடித்துக் கொண்டிருந்தபோது திடீரென கால் வழுக்கியதாக தெரிகிறது.

    உடனே விழாமல் இருப்பதற்காக அருகில் உள்ள மின் கம்பத்தை பிடித்துள்ளார். மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததால் அழகர் கண் இமைக்கும் நேரத்தில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் விரைந்து வந்த காரைக்குடி தெற்கு போலீசார் அழகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    முன்னதாக அழகரின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×