என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காரைக்குடியில் மின்சாரம் தாக்கி மெக்கானிக் பலி
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள பாப்பாவூரணியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் அழகர் (வயது 19). இவர் கழனிவாசல் பகுதியில் உள்ள மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்த்து வந்தார்.
இன்று காலை அழகர் வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டார். அப்போது காரைக்குடி முதல் பிட் பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்றார். அங்கு அழகர் டீ குடித்துக் கொண்டிருந்தபோது திடீரென கால் வழுக்கியதாக தெரிகிறது.
உடனே விழாமல் இருப்பதற்காக அருகில் உள்ள மின் கம்பத்தை பிடித்துள்ளார். மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததால் அழகர் கண் இமைக்கும் நேரத்தில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் விரைந்து வந்த காரைக்குடி தெற்கு போலீசார் அழகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக அழகரின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்