என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேலூரில் மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை
வேலூர்:
வேலூர் அடுத்த விருபாட்சிபுரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது42). கூலித்தொழிலாளி. இவரது முதல் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதனால் மேகலா (35) என்பவரை ராஜா 2-வதாக திருமணம் செய்து கொண்டார். ராஜாவின் முதல் மனைவியின் மகன் மகேசுக்கும் மேகலாவுக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மேகலா கடந்த 15-ந்தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் 2-வது மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்ததால் ராஜா மனவேதனை அடைந்தார். யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று ராஜா வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார்.
ராஜா மயங்கி கிடப்பதைக் கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்த துக்கத்தில் கணவரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்