என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்பொட்டு தற்கொலை

    குடியாத்தம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்பொட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தத்தை அடுத்த பிச்சனூர் காளியம்மன்பட்டி சாமியார் மலை விஜயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் வினோத். கட்டிட தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த சந்தியா (வயது 20) என்ற பெண்ணை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    நேற்று காலையில் சாமியார் மலைப் பகுதியில் உள்ள பள்ளியில் வினோத் வாக்களித்து விட்டு மதியம் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டுக்குள் கூரையில் சேலையால் சந்தியா தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார் இதனை கண்ட வினோத் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது சந்தியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சந்தியாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

    தற்கொலை செய்துகொண்ட சந்தியாவிற்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×