search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாட்ஸ் அப்
    X
    வாட்ஸ் அப்

    மின் விபத்து குறித்து தகவல் தெரிவிக்க வாட்ஸ் அப் எண் அறிவிப்பு

    விவசாய நிலத்தில் மின்வேலி அமைப்பது கிரிமினல் குற்றம் என்று திருவண்ணாமலை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தெரிவித்தார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அறுந்து கிடக்கும் மின் கம்பிகள், சாய்ந்த மின் கம்பங்கள், உடைந்த மின் கம்பங்கள் பற்றிய விவரங்கள் மற்றும் சேதமடைந்து வெளியே தெரியும் புதைவட கம்பிகள், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை பார்த்தவுடன் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு நேரிலோ, தொலைபேசி மூலமோ தகவல் தெரிவிக்க வேண்டும்.

    திருவண்ணாமலை மின் பகிர்மான வட்ட அலுவலகத்தில் மின் விபத்தினை தவிர்க்கும் வகையில் செயல்பட்டு வரும் சேவை மையத்தினை 04175-255325 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு எந்த நேரத்திலும் தெரிவிக்கலாம். மேலும் 9445855768 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தெரிவிக்கலாம். பொதுமக்கள் தங்களுடைய மின் தடை குறித்த புகார்களை 9498794987 மற்றும் 1912 அல்லது 18004256912 என்ற இலவச தொலைபேசி எண்களை 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு மின் தடை குறித்த புகார்களை கணினி மயமாக்கப்பட்ட மின் தடை புகார் மையத்தில் பதிவு செய்தால் மின் தடை நிவர்த்தி செய்யப்படும்.

    மழைகாலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே வயர்கள் ஆகியவற்றின் அருகில் செல்ல வேண்டாம். விவசாய நிலத்தில் மின்வேலி அமைக்க வேண்டாம். விவசாய நிலத்தில் மின்வேலி அமைப்பது கிரிமினல் குற்றம். மீறும் பட்சத்தில் இந்திய தண்டனை சட்டம் மின்சாரம் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×