search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் மூத்த துணைத்தலைவர் தேவதாஸ் மற்றும் நிர்வாகிகள் கருப்புக்கொடியேற்றி போராட்டம்
    X
    காங்கிரஸ் மூத்த துணைத்தலைவர் தேவதாஸ் மற்றும் நிர்வாகிகள் கருப்புக்கொடியேற்றி போராட்டம்

    புதுவையில் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி போராட்டம்- தி.மு.க. பங்கேற்கவில்லை

    மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்திருந்தது.

    புதுச்சேரி:

    மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த ஒரு வருடமாக விவசாயிகள்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக நாடு முழுவதும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பந்த் போராட்டம் நடக்கிறது. புதுவையில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணியின் தொழிற்சங்கத்தினரும், பல்வேறு அமைப்புகளும் பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

    இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்திருந்தது.

    இதன்படி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம், மாவட்ட, வட்டார அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியிருந்தனர். கூட்டணி கட்சிகளான இந்தியகம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, கம்யூனிஸ்டு (எம்.எல்), விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகங்களிலும், நிர்வாகிகளின் வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றியிருந்தனர்.

    முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோரின் வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்தது.

    இன்று மாலை அண்ணாசிலை அருகே கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். ஆனால் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.

    கருப்புக்கொடி போராட்டத்தில் தி.மு.க. பங்கேற்கவில்லை. தி.மு.க. கட்சி அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றப்பட வில்லை. ஏற்கனவே பந்த் போராட்டம் தொடர்பாக காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆலோசனைக்கூட்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திலும் தி.மு.க.வினர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×