என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்
Byமாலை மலர்20 Sep 2021 8:15 AM GMT (Updated: 20 Sep 2021 8:15 AM GMT)
ஈரோட்டில் கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் 3 நாட்கள் நடைபெற உள்ளது.
ஈரோடு:
ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் காயத்ரி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் இன்று (திங்கட்கிழமை) முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மொடக்குறிச்சி பஸ் நிலையம் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கூடத்தில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
மேலும் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பவானி கிழக்கு, நகராட்சி நடுநிலை பள்ளிக்கூடத்திலும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை கோபி வைரவிழா தொடக்க பள்ளிக்கூடத்திலும், 22-ந்தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பெருந்துறை கிழக்கு அக்ரஹார வீதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கூடத்திலும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்திலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
சிறப்பு முகாமில் தலா 500 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட உள்ளது. எனவே இது வரை தடுப்பூசி போடாமல் உள்ள கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ததற்கான அட்டை, ஆதார் கார்டுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0424 2275592 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் காயத்ரி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் இன்று (திங்கட்கிழமை) முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மொடக்குறிச்சி பஸ் நிலையம் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கூடத்தில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
மேலும் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பவானி கிழக்கு, நகராட்சி நடுநிலை பள்ளிக்கூடத்திலும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை கோபி வைரவிழா தொடக்க பள்ளிக்கூடத்திலும், 22-ந்தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பெருந்துறை கிழக்கு அக்ரஹார வீதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கூடத்திலும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்திலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
சிறப்பு முகாமில் தலா 500 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட உள்ளது. எனவே இது வரை தடுப்பூசி போடாமல் உள்ள கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ததற்கான அட்டை, ஆதார் கார்டுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0424 2275592 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X