என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாளை 880 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்- கலெக்டர் தகவல்
Byமாலை மலர்18 Sep 2021 8:12 AM GMT (Updated: 18 Sep 2021 8:12 AM GMT)
வேலூர் மாவட்டம் முழுவதும் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் 880 இடங்களில் நடைபெற உள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வேலூர் மக்களுக்கு வாட்ஸ்அப்பில் ஆடியோ குறுந்தகவல் ஒன்றை பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:-
தமிழக அரசின் உத்தரவின் பேரில் வேலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் பலர் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்த நிலையில் அரசின் உத்தரவின்பேரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அன்று வேலூர் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் 880 இடங்களில் நடைபெற உள்ளது.
கொரோனாவால் பலர் பெற்றோரை இழந்துள்ளனர். வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் ஏராளம் பேர். தற்போது தான் மெல்ல, மெல்ல அனைவரும் மீண்டு வருகின்றனர். இந்தப்பேரிடர் மீண்டும் சமூகத்தில் தாக்காமல் இருக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
இந்த முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வேலூர் மக்களுக்கு வாட்ஸ்அப்பில் ஆடியோ குறுந்தகவல் ஒன்றை பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:-
தமிழக அரசின் உத்தரவின் பேரில் வேலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் பலர் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்த நிலையில் அரசின் உத்தரவின்பேரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அன்று வேலூர் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் 880 இடங்களில் நடைபெற உள்ளது.
கொரோனாவால் பலர் பெற்றோரை இழந்துள்ளனர். வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் ஏராளம் பேர். தற்போது தான் மெல்ல, மெல்ல அனைவரும் மீண்டு வருகின்றனர். இந்தப்பேரிடர் மீண்டும் சமூகத்தில் தாக்காமல் இருக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
இந்த முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X