என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோடு மாநகராட்சியில் 67 முகாம்களில் 16 ஆயிரத்து 315 பேருக்கு தடுப்பூசி
Byமாலை மலர்13 Sep 2021 8:16 AM GMT (Updated: 13 Sep 2021 8:16 AM GMT)
ஈரோடு மாநகராட்சியில் நடந்த 67 முகாம்களிலும் மொத்தம் 16 ஆயிரத்து 315 பேர் நேற்று ஒரே நாளில் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
ஈரோடு:
தமிழகம் முழுவதும் நேற்று மெகா முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் 847 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டது.
இதில் ஈரோடு மாநகராட்சியில் மட்டும் 67 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டது. ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் தலைமையில் மாநகராட்சி நல அதிகாரி டாக்டர் முரளி சங்கர் மற்றும் சுகாதார அதிகாரிகள், செவிலியர்கள் கொண்ட குழுவினர் இந்த முகாம்களில் தடுப்பூசிகள் போட்டனர்.
வாக்குச்சாவடி மையங்கள், பொது இடங்கள் என பொதுமக்கள் கூடும் பகுதிகளில் தடுப்பூசி போடப்பட்டது. அத்துடன், அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களில் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் வரவழைக்கப்பட்டு ஊசி போடப்பட்டது.
இந்த முகாம்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமேலாண்மை இயக்குனரும், ஈரோடு மாவட்ட கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரியுமான வி.தட்சிணாமூர்த்தி, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் ஆர்.கே.வி. ரோடு மாநகராட்சி பூங்கா, இடையன்காட்டு வலசு பள்ளிக்கூடங்களில் நடந்த தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டனர்.
ஈரோடு மாநகராட்சியில் நடந்த 67 முகாம்களிலும் மொத்தம் 16 ஆயிரத்து 315 பேர் நேற்று ஒரே நாளில் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் நேற்று மெகா முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் 847 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டது.
இதில் ஈரோடு மாநகராட்சியில் மட்டும் 67 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டது. ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் தலைமையில் மாநகராட்சி நல அதிகாரி டாக்டர் முரளி சங்கர் மற்றும் சுகாதார அதிகாரிகள், செவிலியர்கள் கொண்ட குழுவினர் இந்த முகாம்களில் தடுப்பூசிகள் போட்டனர்.
வாக்குச்சாவடி மையங்கள், பொது இடங்கள் என பொதுமக்கள் கூடும் பகுதிகளில் தடுப்பூசி போடப்பட்டது. அத்துடன், அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களில் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் வரவழைக்கப்பட்டு ஊசி போடப்பட்டது.
இந்த முகாம்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமேலாண்மை இயக்குனரும், ஈரோடு மாவட்ட கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரியுமான வி.தட்சிணாமூர்த்தி, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் ஆர்.கே.வி. ரோடு மாநகராட்சி பூங்கா, இடையன்காட்டு வலசு பள்ளிக்கூடங்களில் நடந்த தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டனர்.
ஈரோடு மாநகராட்சியில் நடந்த 67 முகாம்களிலும் மொத்தம் 16 ஆயிரத்து 315 பேர் நேற்று ஒரே நாளில் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X