என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இடஒதுக்கீடு போராளிகளுக்கு மணிமண்டபம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி வரவேற்பு
Byமாலை மலர்3 Sep 2021 4:35 AM GMT (Updated: 3 Sep 2021 4:35 AM GMT)
இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு விழுப்புரத்தில் ரூபாய் 4 கோடி மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்துள்ளார்.
சென்னை:
சட்டமன்ற தேர்தலின் போது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தி.மு.க. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் பேசும்போது, இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 போராளிகளுக்கு தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்திருந்தார்.
அக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 போராளிகளுக்கு தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர், பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகனின் கோரிக்கையை ஏற்று 1987-ம் ஆண்டு நடைபெற்ற வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு விழுப்புரத்தில் ரூபாய் 4 கோடி மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்துள்ளார்.
அதோடு அவர்களின் வாரிசுகளுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பிற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலின் போது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தி.மு.க. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் பேசும்போது, இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 போராளிகளுக்கு தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்திருந்தார்.
அக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 போராளிகளுக்கு தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர், பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகனின் கோரிக்கையை ஏற்று 1987-ம் ஆண்டு நடைபெற்ற வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு விழுப்புரத்தில் ரூபாய் 4 கோடி மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்துள்ளார்.
அதோடு அவர்களின் வாரிசுகளுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பிற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X