என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சட்டசபையில் பாட்டு பாடிய ஓ.பன்னீர்செல்வம்
Byமாலை மலர்28 Aug 2021 7:28 AM GMT (Updated: 28 Aug 2021 8:16 AM GMT)
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் மீண்டும் சபைக்கு வந்தனர்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவாதத்தின்போது சட்டமன்ற அ.தி.மு.க. துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அவை முன்னவர் துரைமுருகனுக்கும் இடையே கடுமையான விவாதம் ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் வெளிநடப்பு செய்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் மீண்டும் சபைக்கு வந்தனர். அப்போது துரைமுருகன் எழுந்து, ஓ.பன்னீர்செல்வம் பற்றி நான் பேசிய கருத்தை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். அதனை அவை குறிப்பில் இருந்து நீக்கி விடுங்கள் என்று கூறினார்.
இதையடுத்து சபாநாயகர் அதனை அவை குறிப்பில் இருந்து நீக்கினார்.
அப்போது ஒரு பாடலை ஓ.பன்னீர்செல்வம் பாடினார்.
தமிழக சட்டசபையில் இன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவாதத்தின்போது சட்டமன்ற அ.தி.மு.க. துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அவை முன்னவர் துரைமுருகனுக்கும் இடையே கடுமையான விவாதம் ஏற்பட்டது.
அ.தி.மு.க. வெளிநடப்பு செய்வதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்ததை தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் சபையை விட்டு வெளியேறினார்கள். அப்போது ஓ.பன்னீர்செல்வம் பற்றியும் அவரது மகனை பற்றியும் ஒரு கருத்தை துரைமுருகன் தெரிவித்தார்.
சிறிது நேரத்தில் வெளிநடப்பு செய்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் மீண்டும் சபைக்கு வந்தனர். அப்போது துரைமுருகன் எழுந்து, ஓ.பன்னீர்செல்வம் பற்றி நான் பேசிய கருத்தை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். அதனை அவை குறிப்பில் இருந்து நீக்கி விடுங்கள் என்று கூறினார்.
இதையடுத்து சபாநாயகர் அதனை அவை குறிப்பில் இருந்து நீக்கினார்.
அப்போது ஒரு பாடலை ஓ.பன்னீர்செல்வம் பாடினார்.
நதியினில் வெள்ளம்... கரையினில் நெருப்பு... இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு...இதுதான் என் தற்போதைய நிலைமை... என்று பாடினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X