என் மலர்
செய்திகள்

யானை கூட்டத்தை மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு வாலிபர் செல்பி எடுத்த காட்சி
ஆசனூர் மலைப்பாதையில் ஆபத்தை உணராமல் யானை கூட்டத்தை ‘செல்பி’ எடுக்கும் வாலிபர்கள்
ஆசனூர் மலைப்பாதையில் ஆபத்தை உணராமல் யானை கூட்டத்தை ‘செல்பி’ எடுக்கும் வாலிபர்கள் வனத்துறையினர் எச்சரிக்கை
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த வனப்பகுதி வழியாக திண்டுக்கல்லில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.
இந்த நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது கடந்து செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக தமிழக-கர்நாடக எல்லை காரப்பள்ளம் அருகே கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறித்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் காரப்பள்ளம் என்ற இடத்தில் கரும்பு லாரியை எதிர்ப்பார்த்து குட்டிகளுடன் யானைகள் கூட்டமாக வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வந்தது.
இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் ஆபத்தை உணராமல் யானைகளை செல்பி எடுத்து கொண்டிருந்தார்.
பின்னர் யானை கூட்டம் சுமார் 30 நிமிடத்திக்கு பிறகு வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் கர்நாடக-தமிழகம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வனப்பகுதியில் ரோட்டை கடக்கும் யானை உள்ளிட்ட வனவிலங்குகளை அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும். வனவிலங்குகள் திடீரென தாக்குதல் நடத்தினால் ஆபத்து ஏற்பட்டு விடும். எனவே வாகனங்களில் செல்பவர்கள் கவனமாக செல்ல வேண்டும். வனவிலங்குகளை செல்பி எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த வனப்பகுதி வழியாக திண்டுக்கல்லில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.
இந்த நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது கடந்து செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக தமிழக-கர்நாடக எல்லை காரப்பள்ளம் அருகே கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறித்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் காரப்பள்ளம் என்ற இடத்தில் கரும்பு லாரியை எதிர்ப்பார்த்து குட்டிகளுடன் யானைகள் கூட்டமாக வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வந்தது.
இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் ஆபத்தை உணராமல் யானைகளை செல்பி எடுத்து கொண்டிருந்தார்.
பின்னர் யானை கூட்டம் சுமார் 30 நிமிடத்திக்கு பிறகு வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் கர்நாடக-தமிழகம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வனப்பகுதியில் ரோட்டை கடக்கும் யானை உள்ளிட்ட வனவிலங்குகளை அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும். வனவிலங்குகள் திடீரென தாக்குதல் நடத்தினால் ஆபத்து ஏற்பட்டு விடும். எனவே வாகனங்களில் செல்பவர்கள் கவனமாக செல்ல வேண்டும். வனவிலங்குகளை செல்பி எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






