என் மலர்
செய்திகள்

கைது
வேதாரண்யம் அருகே முன்விரோத தகராறில் ஒருவரை தாக்கிய வாலிபர் கைது
வேதாரண்யம் அருகே முன்விரோத தகராறில் ஒருவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி தெற்கு யாதவபுரம் பகுதியை சேர்ந்தவர் துரைராஜன் (வயது 43). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேஷ் (36) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் துரைராஜன் சம்பவத்தன்று குளத்திற்கு குளிக்க சென்றபோது அவரை வெங்கடேஷ் வழிமறித்துகம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்
இது குறித்து துரைராஜன் வேதாரண்யம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து வெங்கடேஷ் என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்.
Next Story






