search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    ஊட்டியில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பூண்டு பயிர்கள் சேதம்- விவசாயிகள் கவலை

    நீலகிரி மாவட்டத்தில் ஒரு வார காலமாக பெய்து வரும் காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு பூண்டு பயிர்கள் அனைத்தும் அடியோடு சாய்ந்து விட்டன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக் காய்கறி விவசாயம் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.

    கேரட், பட்டாணி, பீட்ரூட், உருளை கிழங்கு, பூண்டு ஆகிய பயிர்கள் அதிகளவில் விவசாயிகளால் பயிரிடப்படுகிறது.

    ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான கல்லட்டி, கொல்லிமலை, எம்.பாலாடா, கேத்தி பாலாடா, தேனாடுகம்பை ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கர் பரப்பளவில் பூண்டு பயிரிட்டுள்ளனர்.

    இந்த பூண்டுகள் அனைத்தும் விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. இங்கு விளையும் மலைப்பூண்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் ஒரு வார காலமாக பெய்து வரும் காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு பூண்டு பயிர்கள் அனைத்தும் அடியோடு சாய்ந்து விட்டன. இதனால் விவசாயிகள் மிகவும் கவலையில் உள்ளனர். இதுகுறித்து பூண்டு பயிரிட்டிருந்த விவசாயிகள் கூறும்போது, பூண்டு விவசாயத்தில் முதலீடு செலவு அதிகம். காற்று, மழையால் பயிர்கள் சாய்ந்து விட்டன. பாதிக்கு பாதி கூட கைக்கு கிடைக்காது. கடந்தாண்டும் மழையால் பாதிக்கப்பட்டோம். அதே போன்று இந்த ஆண்டும் இப்படி ஆகிவிட்டது. இதனால் என்ன செய்வது என்றே தெரியவில்லை என்றனர்.

    Next Story
    ×