என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுக்கோட்டை மாவட்த்தில் கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்18 Jun 2021 12:48 PM GMT (Updated: 18 Jun 2021 12:48 PM GMT)
புதுக்கோட்டை மாவட்த்தில் கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்தனர். புதிதாக 69 பேருக்கு தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 25 ஆயிரத்து 937 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில் கொரோனா சிகிச்சையில் இருந்தவர்களில் 259 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 670 ஆக உயர்ந்துள்ளது.
ஆனால், 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 282 ஆக அதிகரித்தது. தற்போதைய நிலவரப்படி 985 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்தில் புதிதாக 7 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அவா்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில் இப்பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாரி நகரை சேர்ந்த 77 வயது முதியவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயரிழந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X