என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்27 April 2021 1:58 PM GMT (Updated: 27 April 2021 1:58 PM GMT)
சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே கொரோனா பரவலை தடுக்க முககவசம் உயிர் கவசம் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் 2-வது முறையாக கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. முதலில் ஒற்றை இலக்க எண்ணாக கொரோனா தொற்று தொடங்கி படிப்படியாக இரட்டை இலக்க எண்ணை எட்டி பிடித்தது.
இந்த நிலையில் நேற்று 3 இலக்க எண்ணை எட்டியது. நேற்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக சிவகங்கை, சிங்கம்புணரி, தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து உள்ளது. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 8 ஆயிரத்து 191 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தற்போது கொரோனா தாக்கி அரசு ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனை, வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 520 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்த நிைலயில் கொரோனா பாதித்து 75 பேர் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-
கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முககவசம் உயிர் கவசம் என்பதை உணர வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரும் போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் போது அவசியம் கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவ வேண்டும். இதை கடைபிடித்தால் நிச்சயம் கொரோனா தாக்குதலில் இருந்து நாம் விடுபடலாம். எனவே கொரோனா பரவலை தடுக்க அனைவரும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X