search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ஆற்காடு அருகே கணவன்-மனைவி தூக்கிட்டு தற்கொலை

    ஆற்காடு அருகே கணவன், மனைவி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த கலவை மேல்புதுப்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது50). கூலித்தொழிலாளி. இவரது மனைவி உமா (44). உமாவுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கும்படி தனது கணவரிடம் அடிக்கடி வலியுறுத்தி வந்தார்.

    அதற்கு செல்வம் தன்னிடம் பணம் இல்லை என கூறி சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு இது சம்பந்தமாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை அறையில் தூங்கிக் கொண்டிருந்த உமா அங்கு இருந்த மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வம், உமா தற்கொலை செய்து கொண்டதால் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்களோ என எண்ணி அதே ஊரில் சாலையோரம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர் இதுகுறித்து வாழபந்தல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கணவன்- மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் கலவை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை செய்துகொண்ட தம்பதிக்கு 2 மகள்கள் 1 மகன் உள்ளனர்.
    ஆற்காடு, ஏப்.13-

    ஆற்காடு அடுத்த கலவை மேல்புதுப்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது50). கூலித்தொழிலாளி. இவரது மனைவி உமா (44). உமாவுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கும்படி தனது கணவரிடம் அடிக்கடி வலியுறுத்தி வந்தார்.

    அதற்கு செல்வம் தன்னிடம் பணம் இல்லை என கூறி சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு இது சம்பந்தமாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை அறையில் தூங்கிக் கொண்டிருந்த உமா அங்கு இருந்த மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வம், உமா தற்கொலை செய்து கொண்டதால் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்களோ என எண்ணி அதே ஊரில் சாலையோரம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர் இதுகுறித்து வாழபந்தல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கணவன்- மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் கலவை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை செய்துகொண்ட தம்பதிக்கு 2 மகள்கள் 1 மகன் உள்ளனர்.

    Next Story
    ×