search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இ-பாஸ்
    X
    இ-பாஸ்

    நீலகிரிக்கு வரும் வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்

    2-வது அலைக்கு முன்பு கேரளா மற்றும் புதுச்சேரியில் இருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் இ-பாஸ் கட்டாயம் என நடைமுறையில் இருந்தது.

    ஊட்டி:

    உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான நீலகிரிக்கு கோடைகாலத்தையொட்டி சமவெளி பகுதி, வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் ஆண்டுதோறும் குவிவது வழக்கம்.

    கொரோனா தொற்றால் கடந்த ஆண்டு மார்ச் முதல் இ-பாஸ், இ-பதிவு என கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

    ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் கட்டுப்பாடுகள் தளர்த் தப்பட்டன. இதனையடுத்து சினிமா தியேட்டர், பூங்காக்கள் திறக்கப்பட்டன. நாள் ஒன்றுக்கு 5-க்கும் கீழ் பாதிப்பு எண்ணிகை குறைந்தது.

    இந்நிலையில் கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் வீச தொடங்கியுள்ளது. நீலகிரி மாவடத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. நேற்று 30 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில், பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,869 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந் தவர்களின் எண்ணிக்கை 50-ஆக உள்ளதுள்ளது.

    இது குறித்து நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

    நீலகிரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒரே பகுதியில் 3 பேருக்கு மேல் தொற்று உறுதியானால் அந்த பகுதியை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    கட்டுப்பாட்டு பகுதிகளில் போலீஸ், உள்ளாட்சி ஊழியர் மற்றும் தன்னார்வலர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

    தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

    தமிழக அரசு தெரிவித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர். அவர்கள் கூட்டம் கூடாமலும், அதிக நேரம் நிற்காமலும் ஒரே வழியில் சென்று திரும்ப வழிவகை செய்யப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

    கட்டுப்பாட்டு பகுதிகளில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டு இருக்கிறது.

    2-வது அலைக்கு முன்பு கேரளா மற்றும் புதுச்சேரியில் இருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் இ-பாஸ் கட்டாயம் என நடைமுறையில் இருந்தது.

    தற்போது நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் பிறபகுதிகளில் இருந்து வருவர்களுக்கு இ-பதிவு முறை தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×