search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துரைமுருகனுக்கு ஆதரவாக சேர்க்காடு பகுதியில் வாக்கு சேகரித்த அவரது மருமகள் சங்கீதா கதிர் ஆனந்த்.
    X
    துரைமுருகனுக்கு ஆதரவாக சேர்க்காடு பகுதியில் வாக்கு சேகரித்த அவரது மருமகள் சங்கீதா கதிர் ஆனந்த்.

    காட்பாடி தொகுதியில் மாமனாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த மருமகள்

    காட்பாடி தொகுதியில் போட்டியிடும் துரைமுருகனை ஆதரித்து வேலூர் எம்.பி. டி.எம். கதிர் ஆனந்த் மனைவி சங்கீதா கதிர் ஆனந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
    வேலூர்:

    காட்பாடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் போட்டியிடுகிறார்.

    அவரை ஆதரித்து வேலூர் எம்.பி. டி.எம். கதிர் ஆனந்த் மனைவி சங்கீதா கதிர் ஆனந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். சேர்க்காடு, பெரிய ராமநாதபுரம், விண்ணம்பள்ளி, வள்ளிமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை பொது மக்களிடம் எடுத்துக்கூறி வாக்குறுதிகள் அனைத்தும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்து மாமனாருக்காக வாக்கு சேகரித்தார்.

    துரைமுருகன் அமைச்சராக இருந்த போது ஆற்றிய பல்வேறு திட்டங்கள், பாலாறு, ரெயில்வே மேம்பாலங்கள், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், அகலமான சாலைகள், காவிரி கூட்டுக் குடிநீர், அங்கன்வாடி, பள்ளி கட்டிடங்கள், ரே‌ஷன் கடைகள், அனைத்து கிராமங்களுக்கும் பஸ் வசதி, ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற திட்டங்களை எடுத்துக் கூறி வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    காட்பாடி தொகுதியில் ரூ.15 ஆயிரம் கோடியில் சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்றார்.
    Next Story
    ×