search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப சிதம்பரம்
    X
    ப சிதம்பரம்

    இந்தியர்களுக்கு தடுப்பூசி போடுவதில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது- ப.சிதம்பரம்

    நடமாடும் முகாம்கள் மூலமாகவும் கொரோனா தடுப்பூசிபோட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று ப. சிதம்பரம் கூறி உள்ளார்.
    சென்னை:

    முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமாக ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

    * இந்தியர்களுக்கு தடுப்பூசி போடுவதில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது.

    * 5.9 கோடி தடுப்பூசியை ஏற்றுமதியை செய்த இந்தியா, நாட்டு மக்களுக்கு 3 கோடி தடுப்பூசிதான் போட்டுள்ளது.

    * கொரோனா தடுப்பூசிக்கு முன்கூட்டியே பதிவு செய்தல் போன்றவற்றை கைவிட வேண்டும்.

    * நடமாடும் முகாம்கள் மூலமாகவும் கொரோனா தடுப்பூசிபோட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×