என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் அ.தி.மு.க.வுக்கு 5 இடங்கள்

    14 தொகுதிகளை பாஜக- அதிமுக பிரித்துக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையின்போது 3 தொகுதிகள் மட்டுமே அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியானது.
    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ஏற்கனவே என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    மீதமுள்ள 14 தொகுதிகளை பா.ஜ.க. - அ.தி.மு.க. பிரித்துக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையின்போது 3 தொகுதிகள் மட்டுமே அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியானது. இதனால் அ.தி.மு.க.வினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கூடுதல் இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் தங்கள் தலைமையிடம் வலியுறுத்தினர்.

    நீண்ட இழுபறிக்கு இடையே அ.தி.மு.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி உப்பளம், முதலியார்பேட்டை, முத்தியால்பேட்டை, நெல்லித்தோப்பு, காரைக்கால் தெற்கு ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடும் என தகவல் வெளியாகி உள்ளது.
    Next Story
    ×