search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
    X
    புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

    புதுவையில் 1 முதல் 11ம் வகுப்பு வரை ஆல் பாஸ்- ஆளுநர் அறிவிப்பு

    புதுச்சேரியில் 1ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் முழுமையாக இயங்காத நிலையில், தமிழகத்தில் 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும், முழு ஆண்டு தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், புதுச்சேரி மாணவர்களின் நிலை குறித்து கல்வித்துறை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

    இந்நிலையில், புதுச்சேரிக்கு உட்பட்ட அனைத்து பிராந்தியங்களிலும் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் முழு ஆண்டு தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.  

    புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும், தமிழக பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். மாகே, ஏனாம் பகுதியைச் சேர்ந்த 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் நிலை குறித்து கேரளா மற்றும் ஆந்திர பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதல்களின்படி அறிவிக்கப்படும் என்றும் ஆளுநர் கூறி உள்ளார்.

    ‘மேலும் பள்ளிகள் வாரத்தில் 5 நாட்கள் செயல்படும் என்றும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை. 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் மார்ச் 31ம் தேதி வரை செயல்படும். கோடை விடுமுறை ஏப்ரல் 1ம்தேதி தொடங்குகிறது. எனினும், 10, 11 மற்றும் 12ம் வகுப்புகள், அந்தந்த மாநில பள்ளிக்கல்வி வாரியத்தின் தேர்வு அட்டவணைப்படி நடத்தப்படும்’ என்றும் ஆளுநர் கூறி உள்ளார்.

    பள்ளிக் கல்வியைப் பொருத்தவரை, புதுச்சேரி மாநிலத்தில் தமிழகத்தை பின்பற்றியே பாடத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால், பெரும்பாலும், தமிழகத்தைப் பின்பற்றியே முடிவுகளை எடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×