search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    ஆலங்குடி அருகே குளத்தில் மூழ்கி முதியவர் பலி

    ஆலங்குடி அருகே குளத்தில் மூழ்கி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகிலுள்ள வாராப்பூரை சேர்ந்தவர் கணேசன் (வயது 60). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் கூலிவேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வேலை முடிந்து கோழிப்பண்ணையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் கணேசன் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலை கோழிப்பண்ணையில் கணேசன் இல்லை என்பதை அறிந்து உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது வாராப்பூர் பெரியகுளத்தில் ஒரு ஆண் பிணம் மிதப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், உறவினர்கள் சென்று பார்த்தனர். அங்கு குளத்தில் இறந்து கிடந்தது கணேசன் என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சம்பட்டி விடுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குளத்தில் குளிக்கும் போது கால் தவறி விழுந்து கணேசன் இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×