search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பாளை அருகே என்ஜினீயர் தற்கொலை

    பாளை அருகே என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    பாளை கொக்கிரகுளம் செல்வவிநாயகர்கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் அஜித் பாஸ்டின்(வயது 24). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் மதுரையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    ஒரு வாரத்திற்கு முன்பு விடுப்பு எடுத்து ஊருக்கு வந்த அஜித் பாண்டியன் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். மேலும் நண்பர்களையும் சந்திக்க வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அஜித் பாண்டியனின் பெற்றோர் வீட்டில் இல்லை. தனிமையில் இருந்த அஜித்பாண்டியன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த பாளை போலீசார் அவரது உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அஜித் பாண்டியன் தற்கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×