search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சீர்காழி அருகே நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் கேட்ட பட்டியல் எழுத்தர் கைது

    சீர்காழி அருகே நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் கேட்ட பட்டியல் எழுத்தரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தேனூர் பகுதியை சேர்ந்த விவசாயி துரைகண்ணு என்பவர் வயலில் அறுவடை செய்த 172 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்தவற்காக கொண்டு சென்றுள்ளார். அப்போது கொள்முதல் செய்திட மூட்டைக்கு ரூ.40வீதம் 172 மூட்டைக்கு ரூ.6880 பணம் தரவேண்டும் என பட்டியல் எழுத்தர் கேட்டாராம்.

    இதனையடுத்து விவசாயி துரைகண்ணு, நாகை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுலைப்படி ரசாயான பொடி தடவிய ரூ.7 ஆயிரம் பணத்தை கொண்டல் நேரடி நெல்கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் இளங்கோவனிடம் துரைக் கண்ணு கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. நந்தகோபால், இன்ஸ் பெக்டர்கள் ரமேஷ் குமார், அருள் பிரியா மற்றும் போலீசார் இளங்கோவனை கைது செய்தனர்.

    Next Story
    ×