என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செல்போன் திருடிய 3 சிறுவர்கள் கைது
Byமாலை மலர்22 Feb 2021 4:24 AM GMT (Updated: 22 Feb 2021 4:24 AM GMT)
செல்போன் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:
பீகார் மாநிலம கயா மாவட்டத்தை சேர்ந்தவர் முன்னா குமார் (வயது 30). இவரும் இவரது உறவினரான ஹரிலால் குமார் இருவரும் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் சென்னகுப்பம் ராஜாஜி தெருவில் தங்கியிருந்து ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் உள்ள கேண்டீனில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வீட்டில் இருந்தபோது இவர்களுடைய செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு காற்று வருவதற்காக கதவை திறந்து வைத்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது 2 பேர் வீட்டுக்குள் நுழைந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்களை திருடி கொண்டு வெளியே மோட்டார் சைக்கிளுடன் காத்திருந்த நபருடன் தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து ஒரகடம் போலீசில் முன்னாகுமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் இது சம்பந்தமாக செரப்பணஞ்சேரி நாவலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த .18, 17, 14 வயது சிறுவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X