search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தேன்கனிக்கோட்டை அருகே இளம்பெண் தற்கொலை

    தேன்கனிக்கோட்டை அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை தாலுகா இருதுக்கோட்டை அருகே உள்ள வன்னியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகள் கீதா (வயது 18). இவர் தீராத வயிற்றுவலியால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு கொண்டிருந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகாததால் மனம் உடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிமருந்தை குடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி கீதா இறந்தார். இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    Next Story
    ×