என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்18 Feb 2021 12:35 PM GMT (Updated: 18 Feb 2021 12:35 PM GMT)
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கடலூரில் மாவட்ட மாணவர் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கடலூரில் மாவட்ட மாணவர் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் முகேஷ் தலைமை தாங்கினார். இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கலையரசன், வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் கலைச்செல்வன், மீனவர் பிரிவு மாவட்ட தலைவர் கடல் கார்த்திகேயன், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்ட தலைவர் ராம்ராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ரகீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் வக்கீல் சந்திரசேகரன் கலந்து கொண்டு பேசினார். இதில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும். சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும். இந்த விலையை குறைக்க தவறிய மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் நிர்வாகிகள் அன்பழகன், ராமதுரை, சாமி, ஆறுமுகம், தாமோதரன், மங்கலட்சுமி, சுந்தர், ஆனந்தன், விக்கி, பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X