search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    நீலகிரியில் இதுவரை 3 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை

    நீலகிரியில் இதுவரை 3 லட்சத்து 16 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 10-க்கும் கீழ் உள்ளது. தொற்று பாதித்து சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், அரசு மருத்துவமனைகளில் தற்போது 51 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதால் மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்வது நிறுத்தப்பட்டது. இருப்பினும், கொரோனா பரவாமல் இருக்க பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் இருந்து சளி மாதிரி சேகரித்து தினமும் 1,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    நீலகிரியில் இதுவரை 3 லட்சத்து 16 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×