என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீன்சுருட்டியில் விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் குண்டும், குழியுமான சாலை
Byமாலை மலர்3 Feb 2021 12:03 PM GMT (Updated: 3 Feb 2021 12:03 PM GMT)
மீன்சுருட்டியில் விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி சந்தையில் இருந்து முக்குளம் வழியாக முத்துசேர்வாமடம் கிராமம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக காணப்படுகிறது.
சமீபத்தில் பெய்த மழையால் அந்த சாலை மேலும் மோசமடைந்து மோட்டார் சைக்கிள் உள்பட இருசக்கர வாகனங்கள் கூட செல்ல பயனற்றதாக உள்ளது.
இந்த சாலையை சத்திரம், பாகல்மேடு, பிச்சனூர், வெத்தியார் வெட்டு, இளையபெருமாள் நல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை வழியாகதான் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டும்.
9 மற்றும் 11-ம் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இந்த சாலையில் மாணவிகள் சைக்கிளில் கூட சிரமத்துடன் தான் செல்ல வேண்டும். ஏற்கனவே இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் இந்த சாலையை இனிமேலாவது சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X