என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு- முக ஸ்டாலின் பேச்சு
வேலூர்:
வேலூர் மாநகர தி.மு.க. சார்பில் வேலூர் அண்ணாசாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரின் உருவ சிலைகளை நேற்று இரவு மு.க.ஸ்.டாலின் திறந்து வைத்தார்.
வேலூர் என்பது வீரம், விவேகம் நிறைந்த மண். சுதந்திரத்திற்கு பெயர் பெற்றது. இப்படிப்பட்ட ஊரில் இரு முக்கிய தலைவர்களின் சிலைகள் திறக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஒரு நினைவிடம் திறந்து வைக்கப்பட்டது. ஜெயலலிதா நினைவிடம். கொள்கை, லட்சியத்தில் மாறுபாடு இருந்தாலும் அதை விமர்சிக்க நாங்கள் தயாராக இல்லை.
அவர் மறைந்து 4 ஆண்டுகள் ஆகிறது. அவர் மறைந்தபோது பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் பதவி ஏற்றார். பின்னர் திடீரென அவரது பதவி பறிக்கப்பட்டது.
பின்னர் சசிகலா முதல்-அமைச்சர் பொறுப்பேற்க கவர்னர் ஒப்புதலுக்காக காத்திருந்தபோது சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு வந்தது. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவரும் 27-ந் தேதிதான் விடுதலை ஆகி இருப்பார்.
அவர் மறைந்த பின்னர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் தியானம் செய்தார். அவரது ஆவியுடன் பேசினார்.
மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றும், விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சிகிச்சைகள் குறித்த செய்தி வெளியிடவில்லை. மாறாக அவர் இட்லி சாப்பிட்டார் என்று கூறினார்கள்.
மரணம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனில் ஏன்? ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகவில்லை.
ஜெயலலிதாவை அவர்கள் அடிக்கடி பல இடங்களில் நினைவு கூறுகிறார்கள். ஆனால் அவரது மரணத்தை கண்டுபிடிக்க யோக்கியதை இல்லை.
ஆனால் அவர்களுக்கு அவரது நினைவிடத்தை திறந்து வைக்க என்ன யோக்கியதை உள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
கொரோனா காலத்திலும் மக்களை சந்தித்த ஒரே கட்சி தி.மு.க. தான். இதை எந்த கட்சியும் செய்யவில்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் 100 நாட்களில் மக்களின் அடிப்படை பிரச்சினைகளான சாலை வசதி, போக்குவரத்து, ஓய்வூதியம், பட்டா, குடிநீர் போன்றவற்றுக்கு தீர்வு காணப்படும். இதை நான் உறுதியோடு கூறுகிறேன்.
நான் முதல்-அமைச்சர் ஆன பிறகு மக்கள் அளித்த மனுக்கள் உள்ள பெட்டிகளின் பூட்டை நானே திறப்பேன். அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்