search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதிக்கப்பட்ட நிலக்கடலை செடிகளை பெண் ஒருவர் கையில் எடுத்து காண்பித்த போது எடுத்த படம்.
    X
    பாதிக்கப்பட்ட நிலக்கடலை செடிகளை பெண் ஒருவர் கையில் எடுத்து காண்பித்த போது எடுத்த படம்.

    தொடர் கன மழையால் வேதாரண்யம் பகுதியில் நிலக்கடலை சாகுபடி பாதிப்பு

    தொடர் மழையால் வேதாரண்யம் பகுதியில் நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம், பெரியகுத்தகை, செட்டிபுலம், செம்போடை, தேத்தாகுடி, ஆயக்காரன்புலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வடகிழக்கு பருவமழை முடியும் தருவாயில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

    இப்பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டது. ஒரு சில இடங்களில் கடந்த மாதம் விதை கடலை போடப்பட்டு அவைகள் முளைத்து, பூ பூத்து விழுது இறங்கும் நிலையில் இருந்தது.

    கடந்த 10 நாட்களுக்கு பருவம் தவறிபெய்த கனமழையால் நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டது. விழுது இறங்கும் நேரத்தில் வயல்களில் மழை நீர் தேங்கியதால் செடியில் விழுது இறங்காமல் செடிகள் அழுகிவிட்டன. இதனால் கொத்துக்கொத்தாக கடலை வளரும் செடிகளில் தற்போது ஒரு சில கடலைகள் மட்டும் வளர்ந்துள்ளது.

    இதனால் நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்டுள்ள நிலக்கடலைக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×