என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொடர் கன மழையால் வேதாரண்யம் பகுதியில் நிலக்கடலை சாகுபடி பாதிப்பு
Byமாலை மலர்24 Jan 2021 11:04 AM GMT (Updated: 24 Jan 2021 11:04 AM GMT)
தொடர் மழையால் வேதாரண்யம் பகுதியில் நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம், பெரியகுத்தகை, செட்டிபுலம், செம்போடை, தேத்தாகுடி, ஆயக்காரன்புலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வடகிழக்கு பருவமழை முடியும் தருவாயில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
இப்பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டது. ஒரு சில இடங்களில் கடந்த மாதம் விதை கடலை போடப்பட்டு அவைகள் முளைத்து, பூ பூத்து விழுது இறங்கும் நிலையில் இருந்தது.
கடந்த 10 நாட்களுக்கு பருவம் தவறிபெய்த கனமழையால் நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டது. விழுது இறங்கும் நேரத்தில் வயல்களில் மழை நீர் தேங்கியதால் செடியில் விழுது இறங்காமல் செடிகள் அழுகிவிட்டன. இதனால் கொத்துக்கொத்தாக கடலை வளரும் செடிகளில் தற்போது ஒரு சில கடலைகள் மட்டும் வளர்ந்துள்ளது.
இதனால் நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்டுள்ள நிலக்கடலைக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X