என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நூற்பாலையில் பணியாற்றிய சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
பு.புளியம்பட்டி:
கடலூர் மாவட்டம் நடுவீரன் பட்டி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் விஸ்வா (20 வயது). அதே பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர்கள் 2 பேரும் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள விண்ணப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் தொழிலாளர்களாக கடந்த 6 மாதமாக வேலை பார்த்து வருகிறார்கள்.
இவர்கள் 2 பேரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் இடையே பழக்கம் ஏற்பட்டு பழகி வந்தனர்.
பொங்கல் விடுமுறையையொட்டி அவர்கள் 2பேரும் ஊருக்கு சென்று விட்டு வருவதாக கூறி விட்டு சென்றனர். ஆனால் அவர்கள் வீட்டுக்கு செல்ல வில்லை. அவர்களை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை.
இது குறித்து சிறுமியின் தந்தைபு. புளியம்பட்டி போலீசில் தனது மகள் மாயமாகி விட்டார். விஸ்வா என்பவர் கடத்தி சென்று இருக்கலாம் எனவும், அவரை கண்டு பிடித்து தருமாறு தெரிவித்திருந்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்து அவர்கள் 2 பேரையும் தேடி வந்தனர்.
இதையடுத்து அவர்கள் 2 பேரும் ரகசிய இடத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் சென்று அந்த சிறுமியை மீட்டனர். மேலும் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
வாலிபர் விஸ்வா ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். பின்னர் கோபி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்