search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    கொள்ளிடம் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

    கொள்ளிடம் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொள்ளிடம்:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள குருவியான்பள்ளம் கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் முனுசாமி (வயது 55). இவர் கடந்த 14-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சீர்காழி அருகே இளைய மதுக்கூடம் கிராமம் அண்ணாநகரை சேர்ந்த தனது மகள் அமலா கிருஷ்ணகுமார் வீட்டிற்கு சென்று பொங்கல் சீர்வரிசை கொடுத்து விட்டு அங்கிருந்து பேரன் ஆக்ரிஸ் (5) என்பவனை குருவியான்பள்ளம் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். சிறுவன் ஆக்ரிஸ் நேற்று மாலை வீட்டின் அருகே குளம் இருக்கும் பகுதியில் மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக குளத்துக்குள் சிறுவன் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டான். உடனே அங்கிருந்தவர்கள் குளத்தில் இறங்கி சிறுவனின் உடலை மீட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×