search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    ஆரணி அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி

    ஆரணி அருகே வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    ஆரணியை அடுத்த கல்லோரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சாண்டி (வயது 60), கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு ஆரணி - வந்தவாசி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். கல்லோரிப்பட்டு கூட்ரோடு அருகே செல்லும் போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பிச்சாண்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டி.தரணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×