என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செல்போனுக்கு சார்ஜ் போட்டபோது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
Byமாலை மலர்13 Jan 2021 2:38 PM GMT (Updated: 13 Jan 2021 2:38 PM GMT)
செல்போனுக்கு சார்ஜ் போட்டபோது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள செட்டியாபட்டி சொரியன் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் மெய்யர் (வயது 30). இவர் .நேற்று தனது மொபைலுக்கு `சார்ஜ்' செய்துதற்காக சார்ஜரை வீட்டுச் சுவரில் உள்ள பிளக்கில் சொருகியுள்ளார்.
அப்போது, அதில் இருந்து வந்த மின்சாரம் மெய்யர் உடலில் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆலங்குடி பகுதியில் கடந்த 15 நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சுவற்றில் பொருத்தியிருந்த சுவிட் ஈரப்பதத்துடன் இருந்துள்ளது.
இதன்காரணமாக மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதைகவனிக்காமல் சார்ஜரை பிளக்கில் சொருகியபோது, மெய்யர் மின்சாரம் பாய்ந்து இறந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து சம்பட்டிவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X