search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலி
    X
    மின்சாரம் தாக்கி பலி

    செய்யாறில் மின்சாரம் தாக்கி டேங்க் ஆபரேட்டர் பலி

    செய்யாறில் மின்சாரம் தாக்கி டேங்க் ஆபரேட்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா பைங்கிணர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 37). டேங்க் ஆபரேட்டர். சம்பவத்தன்று செய்யாறு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள மகளிர் விடுதியில் பணியாற்றும் நண்பரை பாா்க்க சென்றுள்ளார். அப்போது அங்கு மின் பராமரிப்பு பணி நடந்துள்ளது. இதனால் உதவி செய்யுமாறு நண்பர் கூறியதை தொடர்ந்து வெங்கடேசன் உதவிசெய்துள்ளார். அப்போது அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவரை மீட்டு செய்யாறு மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து வெங்கடேசனின் மனைவி தீபா கொடுத்த புகாரின் பேரில் செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
    Next Story
    ×