என் மலர்
செய்திகள்

X
விபத்து பலி
திருவண்ணாமலை அருகே வாகனம் மோதி மூதாட்டி பலி
By
மாலை மலர்8 Jan 2021 9:40 AM IST (Updated: 8 Jan 2021 9:40 AM IST)

திருவண்ணாமலை அருகே வாகனம் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை பைபாஸ் சாலை செல்வ விநாயகர் நகர் ஜங்சன் ரோடு அருகில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தார்.
இதுகுறித்து திருவண்ணாமலை கிளியாப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் பிரியங்கா கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X