search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    இளையான்குடி அருகே கல்லூரி மாணவர் மீது தாக்குதல்- 3 பேர் மீது வழக்கு

    இளையான்குடி அருகே கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    இளையான்குடி:

    இளையான்குடி அருகே உள்ள மேலத்துறையூர் கிராமத்தில் சுப்பிரமணி மற்றும் கண்ணப்பன் குடும்பத்தினரிடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. சுப்பிரமணி மகன் யோகேஸ்வரன் (வயது 19). இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் பி.காம் 2- ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

    இவர் தனது நண்பர்கள் பாலசுந்தர், அஜித் ஆகியோருடன் தாயமங்கலத்தில் ஓட்டலில் இரவு உணவை முடித்து ஊருக்கு புறப்பட்டு உள்ளார். அப்போது தாயமங்கலம் விலக்கு வில்லிசேரி என்ற இடத்தில் கண்ணப்பன் மகன் நிவாஷ் (23), மற்றும் சத்தியவான் (24) முத்துக்குமார்( 28) ஆகியோருடன் வந்து யோகேஸ்வரனை தாக்கியுள்ளனர். இதில் முழங்காலில் ரத்த காயம் ஏற்பட்டது. மேலும் அவர் ஓட்டி வந்த புதிய மோட்டார் சைக்கிள் கீழே விழுந்ததில் சேதம் அடைந்தது. காயமடைந்த யோகேஸ்வரன் இளையான்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து யோகேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் இளையான்குடி போலீசார் தாக்குதல் நடத்திய நிவாஷ், சத்தியவான், முத்துக்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×