என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலி
    X
    மின்சாரம் தாக்கி பலி

    ஆரணியில் மின்சாரம் தாக்கி செல்போன் கடை ஊழியர் பலி

    ஆரணியில் மின்சாரம் தாக்கி செல்போன் கடை ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    ஆரணி மார்க்கெட் ரோடு பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரின் மகன் பிரகாஷ் (வயது 24). ஆரணி அண்ணாசிலை அருகில் உள்ள செல்போன் கடையில் வேலைபார்த்து வந்தார். இவர் நேற்று பகலில் இரும்பு கம்பியால் செய்யப்பட்ட விளம்பர பலகையை கடையின் மேல்பகுதியில் வைப்பதற்காக எடுத்துச் சென்றார். அப்போது மேல்பகுதியில் சென்ற உயர் அழுத்த மின்கம்பி மீது விளம்பர பலகை பட்டு அதன்மூலம் பிரகாசை மின்சாரம் தாக்கியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவரை ஆரணி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சென்ற சிறிது நேரத்தில் பிரகாஷ் இறந்துவிட்டார்.

    இதுகுறித்து ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்- இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×