என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓடும் பஸ்சில் பயணியிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது
Byமாலை மலர்20 Dec 2020 10:21 AM GMT (Updated: 20 Dec 2020 10:21 AM GMT)
ஈரோட்டில் ஓடும் பஸ்சில் பயணியிடம் செல்போன் திருடிய வாலிபரை சக பயணிகள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஈரோடு:
சென்னை பெரம்பூர் பழனியாண்டவர் வீதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 40). இவர் சொந்த வேலை காரணமாக ஈரோட்டுக்கு வந்தார். பின்னர் வெங்கடேஷ் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பன்னீர்செல்வம் பூங்கா செல்வதற்காக டவுன் பஸ்சில் ஏறினார். இந்த பஸ் அகில் மேடு வீதி பகுதியில் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது அருகில் நின்று கொண்டிருந்த ஒருவர் வெங்கடேசின் மேல் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை திருடிக்கொண்டு பஸ்சில் இருந்து இறங்கி தப்பி ஓட முயன்றார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், “திருடன் திருடன்” என கூச்சலிட்டார். உடனே சக பயணிகள் துரத்திச் சென்று அவரை மடக்கிப்பிடித்து ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் மதுரை மாவட்டம் கருங்காலக்குடி பகுதியைச் சேர்ந்த ஷேக் முகமது (30) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சேக் முகமதுவை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X