என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேயிலை செடியில் கொப்புள நோய் தாக்கி உள்ளதை படத்தில் காணலாம்.
    X
    தேயிலை செடியில் கொப்புள நோய் தாக்கி உள்ளதை படத்தில் காணலாம்.

    மஞ்சூர் பகுதியில் தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்குதல்

    மஞ்சூர் பகுதியில் தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்குதல் ஏற்பட்டு உள்ளது.
    மஞ்சூர்:

    மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலை சாகுபடி முக்கிய தொழிலாக உள்ளது. பச்சை தேயிலை விவசாயத்தை நம்பி 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக தேயிலை செடிகளில் மகசூலும் அதிகரித்து உள்ளது.

    இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக காலநிலை மாற்றம் காரணமாக தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்கி உள்ளது. காலை மற்றும் மாலை நேரத்தில் பனி சூழ்ந்து கடும் குளிரும் நிலவுவதால் இந்த கொப்புள நோய் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பச்சை தேயிலையை பறிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன் சில இடங்களில் கொப்புள நோய் பரவலை தடுக்க மருந்து அடிக்கும் பணியும் நடந்து வருகிறது.
    Next Story
    ×