என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புரெவி புயல் எதிரொலி- மாவட்டத்தில் பரவலாக மழை
Byமாலை மலர்5 Dec 2020 3:15 PM GMT (Updated: 5 Dec 2020 3:15 PM GMT)
‘புரெவி’ புயல் எதிரொலியாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. சராசரியாக 7.75 செ.மீ. அளவு பதிவாகி இருந்து.
புதுக்கோட்டை:
‘புரெவி’ புயலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2-ந் தேதி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் கன மழை பெய்து கொட்டித்தீர்த்தது. தாழ்வான இடங்களில் தண்ணீர் புகுந்தது. மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் பத்திரமாக கரைப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் புயல் வலுவிழந்த நிலையில் நேற்றும் பரவலாக மழை பெய்தது.
புதுக்கோட்டையில் நேற்று பகலிலும் மழை தூறியபடி இருந்தது. சாலைகளில் நேற்று முன்தினம் ஓடிய மழைநீர் வடிந்திருந்தன. ஒரு சில தாழ்வான இடங்களில் மட்டும் தண்ணீர் தேங்கி நின்றது. பல்லவன் குளத்தில் நீர் நிரம்பி காணப்பட்டது. சாந்தநாத சாமி கோவில் முன்பு உள்ள படித்துறை வழியாக குளத்தில் இருந்து நீர் வெளியேறி சென்றது. தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. சாலையோர வியாபாரிகள் பெரும் சிரமம் அடைந்தனர். புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. சாலையில் மக்கள் குடையை பிடித்தப்படியும், மழை ‘கோட்’ அணிந்து சென்றவர்களையும் காணமுடிந்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நேர நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- ஆதனக்கோட் டை-51.60, பெருங்களூர்- 76.20, புதுக்கோட்டை-47.50, ஆலங்குடி-116.80, கந்தர்வகோட்டை-88, கறம்பக்குடி-174.80, மழையூர்-175, கீழணை-64.80, திருமயம்-67, அரிமளம்-61.20, அறந்தாங்கி-49.80, ஆயிங்குடி-153.20, நாகுடி-63.20, மீமிசல்-41.50, ஆவுடையார்கோவில்-36.50, மணமேல்குடி-80.10, இலுப்பூர்-62, குடுமியான்மலை-57, அன்னவாசல்-79, விராலிமலை-62.20, உடையாளிப்பட்டி-85.40, கீரனூர்-83.50, பொன்னமராவதி-42.80, காரையூர்-42.40. மாவட்டத்தில் மொத்தம் 24 இடங்களில் மழைப்பதிவாகி இருந்தது. மொத்தம் 1, 861.50 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகி இருந்தது. சராசரியாக 77.56 மி.மீட்டர் ஆகும். சென்டி மீட்டர் கணக்கில் 7.75 அளவு மழை பெய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X