search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சிவகங்கையில் சிறுமி கண்முன்னே தாய் வெட்டி கொலை- தந்தை கைது

    சிறுமி கண் முன்னே தாய் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அந்த சிறுமியின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மஜீத் ரோடு தெருவை சேர்ந்தவர் பஞ்சு (வயது60). இவரது மனைவி ராதா (45). இவர்களுக்கு சந்தோஷ் (23) என்ற மகனும், ஜீவா (13) என்ற மகளும் உள்ளனர். பஞ்சு ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    நேற்று இரவு வீட்டில் ராதாவும் மகள் ஜீவாவும் இருந்துள்ளனர். அப்போது பஞ்சுவும் மற்றொருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பஞ்சு அங்கிருந்த வாளால் ராதாவை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த ராதா மகள் கண்முன்னே ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் நகர் போலீசார் விரைந்து சென்று ராதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், ராதாவின் கணவர் பஞ்சுவை பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஞ்சு உடன் சென்ற மற்றொருவரை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×